Showing posts with label சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை பாடல்கள்.. Show all posts
Showing posts with label சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை பாடல்கள்.. Show all posts

Saturday, June 22, 2013

சிவவாக்கியம் (221-230)

சிவவாக்கியம் (221-230)

சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே
******************************************* 
சிவவாக்கியம்-221 

உயிருந்தது எவ்விடம் உடம்பெடுப்பதின் முனம்
உயிரதாவது ஏதடா உடம்பாவதாவது ஏதடா
உயிரையும் உடம்பையும் ஒன்றுவிப்பது ஏதடா
உயிரினால் உடம்பெடுத்த உண்மை ஞானி சொல்லடா

சிவவாக்கியம் (211-220)

சிவவாக்கியம் (211-220)

சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே
******************************************* 
சிவவாக்கியம்-211 

அக்கரம் அனாதியோ ஆத்துமா அனாதியோ
புக்கிருந்த பூதமும் புலன்களும் அனாதியோ
தக்க மிக்க நூல்களும் சதாசிவம் அனாதியோ
மிக்க வந்த யோகிகாள் விரைந்துறக்க வேணுமே!!

Monday, June 17, 2013

சிவவாக்கியம் (201-210)

சிவவாக்கியம் (201-210)

சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே
******************************************* 
சிவவாக்கியம்-201

பூவும் நீரும் என்மனம் பொருந்து கோயில் என் உளம்
ஆவி ஓடி லிங்கமாய் அகண்டம் எங்கும் ஆகினாய்
மேவுகின்ற ஐவரும் விலங்கு தூப தீபமாய்
ஆடுகின்ற கூத்தனுக்கோர் அந்தி சந்தி இல்லையே!!!

Sunday, June 16, 2013

சிவவாக்கியம் (191-200)

சிவவாக்கியம் (191-200)

சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே
******************************************* 
சிவவாக்கியம்-191

ஆதி அந்த மூல விந்து நாதம் ஐந்து பூதமாம் 
ஆதி அந்த மூல விந்து நாதம் ஐந்து எழுத்துமாய் 
ஆதி அந்த மூல விந்து நாதம் மேவி நின்றதும் 

ஆதி அந்த மூல விந்து நாதம் சிவாயமே!!!

Saturday, June 15, 2013

சிவவாக்கியம் (181-190)

சிவவாக்கியம் (181-190)


சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே
******************************************* 
சிவவாக்கியம்-181 

தானிருந்து மூல அங்கி தணல் எழுப்பி வாயுவால்
தேனிருந்து அறை திறந்து தித்தி ஒன்று ஒத்தவே
வானிருந்து மதிய மூன்று மண்டலம் புகுந்த பின்
ஊனிருந் தளவு கொண்ட யோகி நல்ல யோகியே!!  

சிவவாக்கியம் (171-180)

சிவவாக்கியம் (171-180)

சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே
******************************************* 
சிவவாக்கியம்-171 

தாதர் செய் தீமையும் தலத்தில்செய் கீழ்மையும்
கூத்தருக்கு கடைமக்கள் கூடி செய்த காரியம்
வீதி போகும் ஞானியை விரைந்து கல் எறிந்ததும்
பாதகங்கள் ஆகவே பலித்ததே சிவாயமே!

Friday, June 14, 2013

சிவவாக்கியம் (161-170)

சிவவாக்கியம் (161-170)


சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே
******************************************* 
சிவவாக்கியம்-161 

அக்கிடீர் அனைத்துயிர்க்கும் ஆதியாகி நிற்பதும்
முக்கிடீர் உமைப்பிடித்து முத்தரித்து விட்டதும்
மிக்கிடில் பிறந்து இறந்து மாண்டு மாண்டு போவதும்
ஒக்கிடில் உமக்கு நான் உணர்த்து வித்தது உண்மையே!

சிவவாக்கியம் (151-160)

சிவவாக்கியம் (151-160)


சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே
******************************************* 
சிவவாக்கியம்-151

உண்டகல்லை எச்சில் என்று
உள்ளெரிந்து  போடுறீர்  
கண்ட எச்சில் கையலோ பரமனுக்கும் ஏறுமோ
கண்ட எச்சில் கேளடா கலந்த பாணி அப்பிலே
கொண்ட சுத்தம் ஏதடா குறிப்பிலாத மூடரே!

சிவவாக்கியம் (141-150)

சிவவாக்கியம் (141-150)


சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே
******************************************* 
சிவவாக்கியம்-141

சிட்டர் ஒத்து வேதமும் சிறந்த ஆகமங்களும்
நட்ட காரணங்களும் நவின்ற மெய்மை நூல்களும்
கட்டி வைத்த போதகம் கதைக்குகந்த பித்தெலாம்
பொட்டதாய் முடிந்ததே பிரானை யான் அறிந்தபின்.

Thursday, May 30, 2013

சிவவாக்கியம் (131-140)

சிவவாக்கியம் (131-140)


சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே
******************************************* 
சிவவாக்கியம்-131

சாவதான தத்துவச் சடங்கு செய்யும் ஊமைகாள்
தேவர் கல்லும் ஆவரோ சிரிப்பதன்றி என் செய்வேன்
மூவராலும் அறியொணாத முக்கணன் முதற்கொழுந்து
காவலாக உம்முளே கலந்திருப்பன் காணுமே!!

சிவவாக்கியம் (121-130)

சிவவாக்கியம் (121-130)


சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே
******************************************* 
சிவவாக்கியம்-121

உயிரு நன்மையால் உடல் எடுத்துவந்து இருந்திடுமே
உயிர் உடம்பு ஒழிந்தபோது ரூபரூபமாயிடும்
உயிர் சிவத்தின் மாயை ஆகி ஒன்றை ஒன்று கொன்றிடும்
உயிரும் சத்திமாயை ஆகி ஒன்றை ஒன்று தின்னுமே!!!

Tuesday, May 28, 2013

சிவவாக்கியம் (101-110)

சிவவாக்கியம் (101-110)


சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே
******************************************* 
சிவவாக்கியம்-101

மூன்று மூன்று மூன்றுமே மூவர் தேவர் தேடிடும்
மூன்றும் அன்ஜெழுத்துமாய் முழங்கும் அவ்வெழுத்துளே
ஈன்ற தாயும் அப்பனும் இயங்குகின்ற நாதமும்
தோன்றும் மண்டலத்திலே சொல்ல எங்கும் இல்லையே.

சிவவாக்கியம் (111-120)

சிவவாக்கியம் (111-120)


சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே
******************************************* 
சிவவாக்கியம்-111

அல்லல் வாசல் ஒன்பதும் அடைத்தடைந்த வாசலும்
சொல்லும் வாசல் ஓர் ஐந்தும் சொம்மிவிம்மி நின்றது
நல்ல வாசலைத் திறந்து ஞான வாசல் ஊடுபோய்
எல்லை வாசல் கண்டவர் இனிப்பிரப்பது இல்லையே!

சிவவாக்கியம் (091-100)

சிவவாக்கியம் (091-100)

சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே
*******************************************
சிவவாக்கியம்-091

உடம்பு உயிர் எடுத்ததோ உயிர் உடம்பு எடுத்ததோ
உடம்பு உயிர் எடுத்தபோது உருவம் ஏது செப்புவீர்
உடம்பு உயிர் எடுத்தபோது உயிர் இறப்பது இல்லையே
உடம்பு மெய் மறந்து கண்டு உணர்ந்து ஞானம் ஓதுமே!!!

Thursday, May 16, 2013

சிவவாக்கியம் (081-090)

சிவவாக்கியம் (081-090)

சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே
*******************************************
சிவவாக்கியம்-081
 
மிக்க செல்வம் நீர் படைத்த விறகுமேவிப் பாவிகாள்
விறகுடன் கொளுத்தி மேனி வெந்து போவது அறிகிலீர்
மக்கள் பெண்டிர் சுற்றம் மாயை காணும் இவையெலாம்
மறலி வந்து அழைத்த பொது வந்து கூடலாகுமோ?

சிவவாக்கியம் (071-080)

சிவவாக்கியம் (071-080)

சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே
********************************************************************************
சிவவாக்கியம்--071

இருக்கவேண்டும் என்றபோது இருத்தலாய் இருக்குமோ
மரிக்கவேண்டும் என்றாலோ மண்ணுலே படைத்தனர்
சுருக்கமற்ற தம்பிரான் சொன்ன அஞ்செழுத்தையும்
மரிக்குமுன் வணங்கிடீர் மருந்தெனப் பதம் கெடீர்

சிவவாக்கியம் (061-070)

சிவவாக்கியம் (061-070)

சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே
********************************************************************************
சிவவாக்கியம்061

அறத்திறங்களுக்கும் நீ அகண்டம் என்திசைக்கும் நீ
திறதிறங்களுக்கும் நீ தேடுவார்கள் சிந்தை நீ
உறக்கம் நீ உணர்வு நீ உட்கலந்த சோதி நீ
மறக்கொணாத நின் கழல் மறப்பினும் குடிகொளே

Wednesday, May 15, 2013

சிவவாக்கியம் (051-060)

சிவவாக்கியம் (051-060)

சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!

அறிந்தால் வாழ்வும் நன்றே
********************************************************************************
சிவவாக்கியம்-051
 
சொற்குருக்கள் ஆனதும் சோதிமேனி ஆனதும்
மெய்க்குருக்கள் ஆனதும் வேணபூசை செய்வதும்
சற்குருக்கள் ஆனதும் சாத்திரங்கள் சொல்வதும்
செய்க்குருக்கள் ஆனதும் திரண்டுருண்ட தூமையே

Tuesday, May 14, 2013

சிவவாக்கியம் (041-050)

சிவவாக்கியம் (041-050)

சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!

அறிந்தால் வாழ்வும் நன்றே

சித்தர் சிவவாக்கியர் சிந்தனை 041 
 
வாயிலே குடித்த நீரை எச்சில் என்று சொல்லுறீர்
வாயிலே குதப்பு சொல் வேதமெனப் படக் கடவதோ 
வாயில் எச்சில் போக வென்று நீர்தனைக் குடிப்பீர்காள் 
வாயில் எச்சில் போன வண்ணம் வந்திருந்து சொல்லுமே

சிவவாக்கியம் (031–040)

 
சித்தர் சிவவாக்கியர்.  
ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!  
**************************************
சிவவாக்கியம்-031

நெருப்பை மூட்டி நெய்யை விட்டு நித்தம் நித்தம் நீரிலே
விருப்பமொடு  நீர் குளிக்கும் வேத வாக்கியம் கேளுமின்
நெருப்பும்  நீரும் உம்முளே நினைந்து கூற வல்லிரேல்
சர்க்கம்  அற்ற சோதியை தொடர்ந்து கூடல் ஆகுமே!